×

அஞ்சல் துறையில் இணையதள வணிகம் மேம்படுத்தப்படும்

சென்னை: அஞ்சல் துறையின் இணையதள வணிகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இணையதள வணிக சேவையில் இதுவரை 23 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, அஞ்சல் இணையதள வணிகத்தை மேம்படுத்தும் நோக்குடன் விற்பனை பொருட்களின் எண்ணிக்கையை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள எங்களது விற்பனை முகவர்கள் நேரடியாக விற்பனைதாரர்கள் மற்றும் சுயஉதவிக்குழுவினர் இருக்கும் இடத்திற்கு தேடிச்சென்று அவர்களிடம் பொருட்களை கொள்முதல் செய்துகொள்வார்கள்.

இதுபோக, அஞ்சல் இணையதள வணிகத்தில் தங்களின் பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று இதுகுறித்து முழுமையான விவரங்களை கேட்டறியலாம். முழுக்க, முழுக்க உடல் நலத்திற்கு தீங்கில்லாத, அனைவருக்கும் நலன் பயக்கும் வகையிலான பொருட்களையே கொள்முதல் செய்து விற்பனை செய்கிறோம். இவ்வாறு கூறினார்.



Tags : Internet,business, improved ,postal industry
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...