×

மஷ்ரூம் சோயா புலாவ்

செய்முறை : முதலில் பாஸ்மதி அரிசியையும், பருப்பையும் களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். சோயாவை வெந்நீரில் நனைத்து பிழிந்து எடுத்து வைக்கவும். மற்ற காய்கறிகளை நறுக்கி வைக்கவும். குக்கரில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடிக்க விட்டு பல்லாரி சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, கொத்தமல்லி, மஷ்ரூம், சோயா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வாழைக்காய், கேரட், உப்பு சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும். பிறகு பாஸ்மதி அரிசி, பருப்பு வகைகளை சேர்த்து தேங்காய்ப்பால் ஒன்றுக்கு, ஒன்றரை பங்கு வீதம் ஊற்றி கொதிக்கவிடவும். குக்கரை மூடும்போது கீரையை பொடியாக அரிந்து சேர்க்கவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, 5 நிமிடம் அதே சூட்டில் தம்மில் விட்டு இறக்கவும். குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மஷ்ரூம் சோயா புலாவ் ரெடி.


Tags : Mushroom Soy Pulau , Mushroom Soy Pulau
× RELATED தமிழக மாணவர்களுக்கு ஐஏஎஸ்., ஐபிஎஸ்.,...