×

தெலங்கானாவில் ரூ7 கோடி கள்ளநோட்டுகளுடன் 5 பேர் கைது

திருமலை: தெலங்கானா மாநிலம், கம்மம் காவல்துறை ஆணையாளர் இக்பால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தெலங்கானாவில் சத்துபல்லி அருகே நேற்று போலீசார் நடத்திய வாகன சோதனையில் 2 கார்களில் ₹7 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அனைத்தும் ₹2 ஆயிரம் கள்ள நோட்டுகளாக இருந்தது. இந்த கும்பல் ஆந்திரா, தெலங்கானா,

தமிழகத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 8 பேரை கைது செய்து விசாரணை செய்தால் இந்த வழக்கில் மேலும் பல புதிய தகவல்கள் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கும்பலின் தலைவன் மாதர் மீயா  என தெரியவந்துள்ளது என்றார்.

Tags : Telangana ,Five , Telangana, counterfeit, arrested
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து