×

காஷ்மீர் எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்

ஜம்மு: காஷ்மீர் மாநில எல்லைகளில், பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 2,100 முறை அது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 30 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.

ஷாபூர், கிர்னி மற்றும் கிஷ்பா பிரிவுகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதற்கு, இந்திய  வீரர்களும் சரியான பதிலடி கொடுத்தனர்.

Tags : attack ,Pakistan ,Indian ,border ,Kashmir , Kashmir, Indian position, Pakistan attack
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...