சென்னை: 34 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சசிமோகன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.