பாங்காக்: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்றடைந்துள்ளார். பாங்காக் நகரில், தாய்லாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார். தாய்லாந்து மொழியான தாய் மொழியில் திருக்குறள் நூலையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.