×

சீனாவில் ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் இயங்கும் 5ஜி இணையசேவை அறிமுகம்

பெய்ஜிங்: சீனாவில் ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் இயங்கும் 5ஜி இணையசேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் தற்போதைய அதிவேகமாக கருதப்படும் 5ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யூனிக்கோம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதற்கு குறைந்தபட்ச மாதாந்திர கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் 1,272 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச கட்டணமாக 6 ஆயிரம் ரூபாய் செலுத்துவோருக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் 300 ஜிபி டேட்டாவை பெற முடியும். இதனை தொடர்ந்து பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், உஹான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

5 ஜி சேவையை பெறுவதற்கு ஏற்கனவே 1 கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்ததாகவும் ஹூவேய் மற்றும் ஸியோமி நிறுவன செல்போன்கள் ஏற்கனவே 5 ஜி தொழில்நுட்பம் கொண்ட போன்களை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் 4 ஜி எல்.டி.இ. தொழில்நுட்பத்தை விட 10 முதல் 100 மடங்கு 5 ஜியின் பதிவிறக்க வேகம் அதிகம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 2020ம் ஆண்டிலேயே 5ஜி சேவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்னதாகவே அந்த இலக்கை சீனா அடைந்துள்ளது.


Tags : Introduction ,China , China, for a moment, a GP, speed, 5G internet service, Introduction
× RELATED சீனாவில் பிரம்மாண்ட கார்...