×

கடலூர் அருகே குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய 3 பேர் கைது: போலீசார் விசாரணையில் திடுக் தகவல்

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காயவைத்த வேர்க்கடலையை மிதித்த குழந்தையை அடித்து கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெய்வேலியை அடுத்த மேலக்குப்பத்தை சேர்ந்த உத்தண்கி ராஜேஸ்வரி தம்பதி தங்கள் 3 மகள்களுடன் கமலம் என்பவரது வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கமலத்தின் வீட்டு மாடியில் வேர்க்கடலையை காயவைத்துள்ளார். அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் வேர்க்கடலையை மிதித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கமலாவின் குடும்ப நண்பர் ஐயப்பன் என்பவர் மீனா என்ற 5 வயது குழந்தையை தலைமுடியை பிடித்து மாடி சுவற்றில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயப்பட்ட மீனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை பார்த்த கமலமும், உறவினர்கள் ஐயப்பன், அருண் முருகன், அஞ்சலை ஆகியோர் கொலையை மறைக்க முடிவு செய்து குழந்தை தவறி விழுந்துவிட்டதாக நாடகமாடி உள்ளனர். மேலும் கமலத்தின் முந்திரி தோப்பு முதனை கிராமத்தில் இருப்பதால் அங்கு சென்று குழந்தையின் உடலை புதைத்திருக்கிறார்கள். மீனாவின் உடலை முதனை கிராமத்திற்கு கொண்டு சென்று ஒரு முந்திரி மரத்தின் கீழ் புதைத்து விட்டனர். இதனை தொடர்ந்து மீனாவின் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே விடாததால் ராஜேஸ்வரியும் கணவர் உத்தண்டியும் அங்கிருந்து தப்பி வந்து நெய்வேலி தெர்மல் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலையை ஒப்புக் கொண்ட கமலம், அஞ்சலை, ஐயப்பன் ஆகியோர் குழந்தையை புதைத்த இடத்தை காட்டினர். அதன் பின்னர் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள அருண் முருகன் என்பவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.


Tags : Cuddalore Cuddalore ,police investigation ,Tituk , Cuddalore, child, murder, drama, 3 arrested, police investigating
× RELATED கேரளாவில் வேகமாக பரவி வரும்...