×

அரக்கோணம் அருகே மழை காரணமாக 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் படுகாயம்!

வேலூர் : வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே தொடர் மழை காரணமாக 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிடத்தின் மாடியில் வசித்த 2 குடும்பத்தினர் வெளியூர் சென்றதால் உயிர்தப்பினர். மேலும் இந்த விபத்தில் அசோக் என்பவர் மட்டும் படுகாயம் அடைந்துள்ளார். அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அரக்கோணம் அடுத்த ஆயர்பாடியில் லட்சுமி கணேஷ் என்பவருக்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று அமைத்துள்ளது. 3 தளங்களை கொண்ட இந்த கட்டிடத்தில் தரை தலத்தில் உரக்கிடங்கும், முதல் மற்றும் 2வது மாடியில் 2 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். அதில் இரு குடும்பங்களும் தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக கட்டிடம் நிலை குலைந்து இடிந்து விழுந்தது.

அதிகாலை 3 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் மட்டும் படுகாயம் அடைந்துள்ளார். கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய நபரை மீட்டனர். படுகாயமடைந்த அசோக்குமாரை வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் அருகில் இருந்த மற்றொரு வீடு மற்றும் கடை ஆகியவை சேதமடைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 12 பேரில் ஒருவருக்கு மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார். மற்ற நபர்கள் வெளியூர் சென்றதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. கட்டிடம் இடிந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : building collapses ,Arakkonam , Anchorage, building, demolition, accident, one person injured, Vellore, heavy rain
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...