புதுக்கோட்டை : 38 வருவாய் ஆய்வாளர்களுக்கு துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வு அளித்து ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். 2017 முதல் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப கோரி வருவாய் துறையினர் இரு மாதமாக போராட்டம் நடத்தினர். இதன் பின்னர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் 38 வருவாய் ஆய்வாளர்களுக்கு பணியிடங்களை நிரப்பு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.