சென்னை: அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகா புயல் அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா-வில் (நீலகிரி)- 6 செ.மீ, புதுக்கோட்டை இலுப்பூரில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.