சென்னை: சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று எம்எல்ஏ-வாக பதவியேற்க உள்ளதை அடுத்து மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.