×

முதலமைச்சர், அமைச்சர் வேண்டுகோளை ஏற்று அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

சென்னை: முதலமைச்சர், அமைச்சர் வேண்டுகோளை ஏற்று கடந்த 8 நாட்களாக மேற்கொண்டு வந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 178 வட்ட மருத்துவமனைகள், 1,765 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 134 நகர சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 18,070 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணை 354ல் கூறியுள்ளபடி, ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

சில டாக்டர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதனால் சில இடங்களில் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் இறந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. பணிக்கு திரும்பாதவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

மேலும் இன்று காலைக்குள் பணிக்கு திரும்பாதவர்களின் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும். புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசு டாக்டர்கள் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்களை நியமிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சர் எடப்பாடி, மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.


Tags : Government physicians ,strike ,Government ,doctors ,doctors departments ,Lakshmi Narasimman , Government doctors, protest withdrawal, doctors struggle, temporary withdrawal, Lakshmi Narasimman, Chief Minister Edappadi, Minister
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...