×

காட்டுப்பன்றி இறைச்சியை கடத்திய இருவர் கைது

சாம்ராஜ்நகர்: காட்டு பன்றி இறைச்சியை பைக்கில் கடத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.  சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா பிலிகிரிரங்கநாத கோயில் அருகே இருவர் காட்டு பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை பைக்கில் எடுத்து செல்வதாக வனத்துறை அதிகாரி மகாதேவைய்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த அதிகாரிகள் வனபகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது இவர்களிடம் 10 கிலோ காட்டு பன்றி இறைச்சி இருப்பது தெரிய வந்தது.

அதை பறிமுதல் செய்த அதிகாரி இவர்களை பிடித்து விசாரணை நடத்தினார். இதில் இவர்கள் ஜக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த மதலைமுத்து, சாமுவேல் என்றும் வனபகுதிக்குள் சட்டவிரோதமாக புகுந்து காட்டு பன்றியை வேட்டையாடி கொன்று அதன் இறைச்சியை எடுத்து செல்வதும் தெரிய வந்தது. இவர்களை கைது செய்த அதிகாரி இவர்கள் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.


Tags : Kidnapping , Meat,wild boar, kidnapping
× RELATED பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது