புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை தாய்லாந்து செல்கிறார். ஆசியான் அமைப்பில் புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன் ஆசியான் அமைப்புடன் தடையற்ற வர்த்தக உறவு கொண்டுள்ள இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் இணைந்துள்ளன. இது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு பிரிவு செயலாளர் விஜய் தாகூர் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: 16வது ஆசியான் மாநாடு, 14வது கிழக்கு ஆசிய மாநாடு, 3வது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு மாநாடு ஆகியவை பாங்காக்கில் நாளை முதல் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகளான, 16 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ சாவின் அழைப்பை ஏற்று, இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை தாய்லாந்து செல்ல இருக்கிறார். அங்கு, இதர நாடுகளின் தலைவர்களை சந்தித்து, பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். அடுத்தடுத்து ஏற்பட்ட பூகம்பத்தால் வீடுகளுக்கு செல்வதற்கு அச்சமடைந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.