×

‘மருத்துவர்களை மிரட்டுவது நியாயமற்றது’

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏழு நாட்களாக உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள்  தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

போராடும் அரசு மருத்துவர்களை அழைத்துப்பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக,  மருத்துவர்களை ஊர்மாற்றம் செய்வதும், பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மாற்று டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என மருத்துவர்களை மிரட்டும் அரசின் ஆணவப்போக்கு ஒருபோதும் வெற்றிபெறாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : doctors , unfair , intimidate doctors
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை