மும்பை: மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் சிவசேனா எம்.பி,சஞ்சய்ராவத் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். பாஜக கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில் நடந்த சந்திப்பால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கிடைத்தால் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவுக்கோர சிவசேனா கட்சி திட்டமிட்டுள்ளது.