×

மராட்டியத்தில் அரசு நிர்வாகம் ஏதும் இல்லாததால் ஆளுநரை சந்தித்து முறையிட்டதாக ஆதித்ய தாக்கரே பேட்டி

மும்பை: விவசாயிகள் பிரச்சனை குறித்து மராட்டிய ஆளுநருடன் விவாதித்தோம் என்று ஆதித்ய தாக்கரே பேட்டியளித்துள்ளார். தற்போது மராட்டியத்தில் அரசு நிர்வாகம் ஏதும் இல்லாததால் ஆளுநரை சந்தித்து முறையிட்டதாக ஆதித்ய தாக்கரே விளக்கமளித்துள்ளார். மக்களுக்கு உதவி செய்வதே தங்களது முன்னுரிமை பணி என்று ஆதித்ய தாக்கரே பேட்டியளித்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுக்கொண்டோம். தங்கள் கோரிக்கை குறித்து மத்திய அரசிடம் பேசுவதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். மீனவர்களுக்கும் உதவி தேவைப்படுகிறது என்று எடுத்து கூறினோம். மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் பிரச்சனை பற்றி தாம் எதுவும் பேச மாட்டேன் என்று ஆதித்ய தாக்கரே பேட்டியில் தெரிவித்தார்.

Tags : Aditya Thackeray ,governor ,government administration , ஆதித்ய தாக்கரே
× RELATED சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நீதியும்...