சென்னை: மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரிய வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தாக்கல் செய்த மனு நாளை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் கோரிக்கை வைத்திருந்தார்.