மதுரை: குமரி - கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட நீரோடி, மார்த்தாண்டம் கிராம கடற்கரையோரங்களில் அலை தடுப்பு சுவர் கட்டக் கோரி தொடரப்பட்ட வழக்கில் குமரி மாவட்ட ஆட்சியர், மதுரை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடல் அலைகள் குடியிருப்புக்குள் புகாத வண்ணம் கட்டப்பட்ட அலை தடுப்புச்சுவர் முற்றிலும் சேதமடைந்துள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.