×

இந்தியா-வங்கதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லி மைதானத்தில் நடைபெறும்: பிசிசிஐ

டெல்லி: இந்தியா வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக 3 -இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி வரும் 3 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகம் காணப்படுவதால், கிரிக்கெட் போட்டியை அங்கு நடத்த எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

 டெல்லி காற்றில் மூன்று நான்கு மணி நேரம் அணியில் விளையாடுவது வீரர்களை மோசமாக பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். இதனால், திட்டமிட்டபடி, டெல்லியில் முதல் டி20 போட்டி நடைபெறுமா? என்று கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, முதல் டி20 போட்டி டெல்லியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.


Tags : match ,BCCI ,India ,Bangladesh ,Delhi Ground , India, Bangladesh, First T20 Tournament, Delhi, BCCI
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...