×

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் தெற்கில் தேஸ்காம் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்தது. ரஹீம் யார் கான் நகருக்கு அருகே ரெயில் சென்று கொண்டு இருந்த போது மூன்று பெட்டிகள் தீ விபத்துக்குள்ளாக்கியது. காலை உணவு சமைக்க ஒரு எரிவாயு  சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்தது. இதில் பெட்டி முழுவதும் தீ பரவியது. இதனால் அலறி அடித்து ஓடிய பயணிகள் சிலர் தீப்பிழம்புகளில் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்து உள்ளனர். இந்த விபத்தில் மொத்தம் 65 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பாகிஸ்தானில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் பயணிகள் உணவு சமைக்க ரெயில்களில் கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புகளை மறைத்து எடுத்து செல்கிறார்கள். நீண்டகால முதலீடுகளின் கீழ் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக பாகிஸ்தான் காலனித்துவ ஆதிக்க கால ரெயில்வே நெட்வொர்க்கே இயங்கி வருகிறது. ஜூலை மாதம் நடந்த விபத்தில் 11 பேரும், செப்டம்பர் மாதம் நடந்த மற்றொரு விபத்தில் நான்கு பேரும் பலியாகி உள்ளனர். 2005 ஆம் ஆண்டில் சிந்து மாகாணத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதியதில் சுமார் 130 பேர் பலியானார்கள்.

Tags : Pakistani , Pakistan, fire, high rise
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு