டெல்லி: நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் கைரேகை அடங்கிய பட்டியல் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் கொடுத்த கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பணியில் போலீசார் மும்முரம் காட்டி வருகின்றனர். தேசிய தேர்வு முகமை, மருத்துவ கல்வி இயக்குனரகம் அளித்த பட்டியலுடன் ஒப்பிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.