சென்னை: கூடங்குளம் அணுமின் கழக கணினிகளுக்குள் சைபர் தாக்குதல் நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் கழக தகவல்கள் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது வெளிப்படையாக தெரியவந்துள்ளதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சைபர் தாக்குதல் குறித்து விரிவான விசாரணையை மத்திய அரசு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.