×

கொள்ளிடம் ஆற்றில் மர்மநபர்களால் தூக்கி வீசப்பட்ட இளைஞரை தேடும் பணி நிறுத்தம்

திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் மர்மநபர்களால் தூக்கி வீசப்பட்ட இளைஞரை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இளைஞர் ஜீவித்தை தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்தியதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மண்ணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் காதலியுடன் ஜீவித் பேசிக் கொண்டிருந்தார். கஞ்சா போதையில் இருந்த 5 பேர் ஜீவித்தை தாக்கி அவரது காதலியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். பலாத்கார முயற்சி தோற்றத்தால் ஆத்திரமடைந்தவர்கள், ஜீவித்தை ஆற்றில் தூக்கி வீசினர். பலாத்காரம் செய்ய முயன்ற 5 பேரில் 2 பேரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.

Tags : teenager ,men , kollidam
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்