நாமக்கல்: மின்சாரத்தை பிரிபெய்டு திட்டத்தின் கீழ் பயன்படுத்தும் திட்டம் அமலில் உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மழைக்காலங்களில் மின் தடை தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண தேவையான உபகரணங்கள் உள்ளது. மின் வயர் அறுந்து கிடந்தாலோ, துண்டிக்கப்பட்டாலோ, மின்வாரியத்துக்கு பொதுமக்கள் உடனே தெரிவிக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் முன்னெச்செரிக்கையுடன் இருக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.