×

அடையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது: போக்குவரத்து பாதிப்பு

சென்னை: திருமுடிவாக்கத்தில் அடையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. திருமுடிவாக்கத்தில் அடையாறு ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருவதால் திருமுடிவாக்கத்தில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரம்பதூர் செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.


Tags : ground bridge ,dam , Temporary terrain, traffic, impact
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...