சென்னை: பேரிடர் மீட்பு குழுவின் விதிமுறைப்படியே குழந்தை சுஜித் உடல் மீட்கப்பட்டது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். துர்நாற்றம் வீசியதால் தான் ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித்தின் உடல் எடுக்கப்பட்டது. ஆழ்துளை கிணறு சம்பவங்களில் இறந்தவர்களின் உடலை எப்படி எடுக்க வேண்டும் என வழிமுறைகள் உள்ளன எனவும் கூறினார்.