×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 16 மாவட்டங்களில் கனமழை நீடிப்பு

சென்னை: வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிதமான முதல் கன மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று சென்ைன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையை ஒட்டி உள்ள குமரி பகுதியில் ேநற்று நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது குமரி கடற்பகுதியில் நகர்ந்து வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது. இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகளை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதை தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற கூடும். கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கன மழை ெபய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூரில் 7 செ.மீ, மாமல்லபுரத்தில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தென், வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய  மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில இடங்களில் லேசான முதல் மிதமான வரை மழை பெய்யக் கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.

கடலுக்கு செல்ல தடை
மன்னார் வளைகுடா, தென் தமிழகம் கடற்கரை பகுதி, குமரி கடல்பகுதி, மாலத்தீவுகள், தெற்கு கேரளா மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளுக்கு 30, 31 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Tags : districts , Heavy winds, low tide, heavy rainfall , 16 districts
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...