×

இனி ஒரு சுஜித் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

சென்னை: போர்வெல் குழியில் இருந்து 4 நாட்களுக்கு பின்னர் நேற்று அதிகாலை உயிரற்ற உடலாக மீட்கப்பட்ட சுஜீத் குறித்து பல்வேறு உருக்கமான பதிவுகள் வாட்ஸ் அப்பில்  வந்தவண்ணம் உள்ளன. அதில் உருக்கத்தையும், படிப்பினையையும் தரும் விதத்தில் வந்த ஒரு பதிவு இதோ...
‘சுஜித்... கடந்த 5 நாள்களாக உங்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட எனது பெயர், உயிர் பெற முடியாத நிலைக்குச் சென்று விட்டேன். கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை. கோடிக்கணக்கானோரின் பிரார்த்தனை. கோடிக்கணக்கானோரின் எதிர்பார்ப்பு அனைத்தும் பொய்த்தன. மீட்கும் வழி தெரியாத மனித சமுதாயத்தில் வாழ வேண்டாம் என்று தன்னைத்தானே மாய்த்துக் கொண்டேன்.

என்னை யாரும் சாகடிக்கவில்லை. குழி தோண்டி மூடாத என் பெற்றோரையோ, அரசையோ இனி யாரும் குறை சொல்லாதீர்கள். எல்லோரும் போங்கள். தீபாவளி விடுமுறை முடிந்தாகி விட்டது. அவரவர்ப் பணிகளை, கடமைகளை கருத்தாய்ப் பாருங்கள். இனி ஒரு சுஜித் வரும் வரை கருமமே கண்ணாயிருங்கள். யாருக்கும் சட்டம் வேண்டாம். திட்டம் வேண்டாம். சுயநலமாய் இருங்கள். இனி ஒரு சுஜித் உருவாகும் போது சட்டத்தை குறை கூறுங்கள். எனது மறைவிற்கு நானே காரணம். எனது பெற்றோரோ...  உடனடியாக மீட்கத் தெரியாத அரசு இயந்திரமோ காரணமில்லை. எனவே யாரும் யாரையும் குற்றம் கூறாதீர்கள். எனக்காகக் கண்ணீர் வடித்த, எனக்காக மனம் வருந்திய அத்தனை பேருக்கும் எனது நன்றி. நான் செல்கிறேன். இனி ஒரு சுஜித் உருவாகமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது எனது கனிவான வேண்டுகோள். இறுதி ஆசை. -அன்புடன் உங்கள் சுஜித்! இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவை பலரும் பார்வேர்டு செய்து வருகின்றனர்.


Tags : No longer a sujith, watch out, forming
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...