×

அரசியல் கட்சியினர் எழுதிய சுவர் விளம்பரம் மீது பெயிண்ட் ஊற்றி அவமரியாதை செய்த மர்ம நபர்கள்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் சுவற்றில் அரசியல் கட்சியினர் எழுதிய விளம்பரத்தில் மர்ம நபர்கள் பெயின்ட் ஊற்றியதால் பதற்றம் ஏற்பட்டது. அந்த சுவற்றுக்கு போலீசார் வெள்ளையடித்து பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.  கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பேரூர் கிராமத்தில் சாலை ஓரம் தனியாருக்கு சொந்தமான சுவற்றில் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் விளம்பரம் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை அந்த சுவர் விளம்பரங்களில் மர்மநபர்கள் யாரோ சாணம் அடித்தும், பெயிண்ட் ஊற்றியும் அவமரியாதை செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

 தகவல் அறிந்ததும் ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் புகழேந்தி, கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி, காவல் ஆய்வாளர் சாகுல்ஹமீது, சோழத்தரம் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் பிரச்னைக்குரிய சுவற்றை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அந்த சுவற்றுக்கு வெள்ளையடித்து மேலும் பிரச்னை ஏற்படா வண்ணம் செய்தனர். இதையடுத்து பதற்றம் முடிவுக்கு வந்தது.


Tags : parties ,politicians , Mysterious,people,insulting, wall painting, politicians
× RELATED அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு