மும்பை: வங்கதேச அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. சூதாட்டத்திற்கு தரகர்கள் தன்னை அணுகியது குறித்து தகவல் அளிக்கவில்லை என்பதால் ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டனான ஷகிப் அல் ஹசன் ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.