×

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தை சுர்ஜித் பெற்றோருக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி பேட்டி

திருச்சி: குழந்தை சுர்ஜித் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த தகவல் கிடைத்ததும் 3 அமைச்சர்களை மீட்புப்பணி மேற்கொள்ள அனுப்பி வைத்தேன். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் இணைந்து மீட்புப் பணி நடைபெற்று வந்தது. ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தை சுர்ஜித்தின் பெற்றோருக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Tags : Surjit ,parents , Pulisanamy on financial assistance of Rs 10 lakh on behalf of Surjith
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்