×

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்படவில்லை : நிர்வாக அதிகாரிகள் விளக்கம்

சென்னை : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடங்குளம் உட்பட நாட்டின் அணுமின் நிலையங்கள் சைபர் நெட்வொர்க் / இன்டர்நெட் இணைப்பில் இல்லை என்று கூறிய நிர்வாகம், இணையத்தில் வைக்கப்படாததால் அணுமின் தொழில்நுட்ப தகவல்களை ஹேக்கர் உள்ளிட்ட யாரும் திருட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. வலைத்தளங்களில் பரவும் தகவல்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.


Tags : cyber attack ,plant ,Koodankulam , Kudankulam, Nuclear, Station, Cyber, Attack, Denial
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...