×

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை : திமுக தலைவர் ஸ்டாலின்

திருச்சி :திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீட்பு பணியை பொறுத்தவரை, அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், 36 அடி ஆழத்தில் இருந்தபோதே, குழந்தையை மீட்டிருக்க முடியும், பேரிடர் மீட்பு படையை உடனடியாக அழைத்திருக்க வேண்டும் என்றும் சுஜித்தை மீட்க ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.மேலும் அரசியல் சாயம் பூசப்படும் என்பதால்தான் குழந்தை சுஜித் மீட்பு பணியை நேரில் பார்வையிடவில்லை என்று குறிப்பிட்ட ஸ்டாலின், பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையே என்ற ஆதங்கம் உள்ளதாக கூறினார்.


Tags : Army ,well ,Stalin ,Sujith ,DMK , Deepal, baby, Sujith, Anjali, DMK, flower ring, Stalin
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...