×

ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்ட சுஜித்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத எம்.பி. ஜோதிமணி

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்ட சுஜித்தின் உடலை பார்த்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்ணீர் விட்டு அழுதார். மீட்பு பணிகள் நடக்கும் போது, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சுஜித்தின் அம்மாவுடன் இருந்தார். சுர்ஜித்தின் தாயார் முதல்நாள் வரும் போது, கையெடுத்து கும்பிட்டு சுஜித்தை எப்படியாவது காப்பாற்றிக்கொடுங்கள் என்று கேட்டார். ஒவ்வொரு நிமிடமும் தாமதமாகும்போது, வீட்டுக்குள் சென்று அவர்களை பார்ப்பதற்கு எனக்கு அச்சமாக இருந்தது என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்று இரவு சுஜித் உடல் மீட்கப்பட்ட போதும் கூட, ஜோதிமணி அங்குதான் இருந்தார். சுஜித் இறந்த செய்தி கேட்டு அங்கேயே நேற்று ஜோதிமணி உடைந்து அழுதார்.

சுஜித்தின் அம்மாவை தோளில் சாய்த்து ஜோதிமணி ஆறுதல் கூறினார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது. குழந்தை சுஜித் இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்து அழுகிய நிலையில் இருப்பதாக தெரிந்தது. இதனை அடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர்.

பின்னர் அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட பின்னர் சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, அவரது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் குழந்தை சுஜித்தின் உடல் ஆவாரம்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags : Sajith ,Jotimani ,Sujith ,Deepal Well ,Congress ,death ,Sujeet , Sujith, Deepal well, Congress MP, Jyotimani, Sujith's mother, Sujeet's death
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது