சென்னை : ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். குழந்தை சுஜித் இறந்ததற்காக தாம் வருந்துவதாகவும் துக்கமடைந்துள்ள பெற்றோருக்கு தனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். குழந்தை சுஜித்தை பத்திரமாக மீட்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.