சென்னை : குழந்தை சுஜித் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் சடலமாக மீட்கப்பட்டது, மனவேதனை அளிக்கிறது என்று கூறினார். ஆழ்துளை கிணறு தொடர்பான வழிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் கவனக்குறைவு இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வல்லுநர் குழு உதவியுடன், குழந்தையை மீட்க இரவு பகலாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் இருந்தும் சிறுவன் சுர்ஜித் வில்சன் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.