×

பெங்களூரு சுற்றுலா பயணிகள் 4 பேர் கடலில் மூழ்கி பரிதாப சாவு

கீழ்வேளூர்: பெங்களூரு பொம்மனஹள்ளி மில்சந்திரா நகரை  சேர்ந்தவர் செய்யதுஇம்திரியாஸ்பாட்சா (50). இவர், தனது மனைவி ரியானா (40), மகன் செய்யதுஅப்பாஸ் (18), மகள் சானியா(16), உறவினர் நிஜாம் (20) ஆகிய  4 பேருடன் நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சுற்றுலா வந்திருந்தார். அதுபோல் பெங்களூரு  கோவிந்தபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரிவான்அகமத்(34). இவர் நேற்று குடும்பத்துடன் நாகூர் தர்காவிற்கு வந்திருந்தார். நாகூர் சில்லடி கடலில் 2 குடும்பமும் குளித்தபோது அலையில் சிக்கி கொண்டனர். அதில் ரியானா, சானியா மற்றும் செய்யதுஅப்பாஸ் ஆகியோர் மீட்கப்பட்டனர்.செய்யது இன்கியாஸ், நிஜாம் ஆகியோர் இறந் தனர். மீட்கப்பட்ட  பாட்சா சில நிமிடத்தில் இறந்தார்.

அதுபோல ரிவான்அகமத் அவரது மகன் ரியாஸ் (12) ஆகிய இருவரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது ரியாஸ் கடல் அலையில் சிக்கி மூழ்கினார். அப்போது கடற்கரையில் இருந்த சில இளைஞர்கள் ரியாசை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து கடலோர காவல் படையினர் விசாரித்து, நாகூர் போலீசில் ஒப்படைத்தனர். நாகூர் போலீசார் ரியாஸ் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bengaluru ,sea ,Sea Pity Death , Bangalore, Tourists,sea Pity ,Death
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...