மணப்பாறை : ஆழ்துளை கிணற்றில் இருந்து 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தது. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலை மருத்துவர்கள் குழு சிறிது நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யவுள்ளனர். இந்த நிலையில் சிறுவன் சுஜித்தின் உடலை வைக்க சிறிய அளவிலான சவப்பெட்டி பிணவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. அந்த சவப்பெட்டியில் சிலுவை குறி பொறிக்கப்பட்டுள்ளது. காலை 6மணி அளவில் சவப்பெட்டியில் வைத்து குழந்தையின் உடல் பெற்றோர்கள் இடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.