புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கி கடந்த செப்டம்பர் 6ம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் நேற்று காலை கொண்டு செல்லப்பட்டார். மாலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அங்கு மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. நேற்றிரவு 7 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.