×

எட்டயபுரம் அருகே காவலாளி உடல் அடக்கத்திற்கு வந்த பெயின்டர் மின்சாரம் தாக்கி சாவு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மாதாபுரத்தைச்சேர்ந்த ஏசுதாஸ் மகன் சின்னப்பன்(53). இவர் சாத்தூர் பகுதியில் உள்ள ஒரு எண்ணெய் மில்லில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் பொருட்கள் வாங்க கோவில்பட்டிக்கு பஸ்சில் வந்தார். அதன்பிறகு ஊர் திரும்ப பஸ்சை பிடிக்க பஸ் நிலையம் நோக்கி நடந்து வந்தார். மெயின் ரோட்டில் வரும்போது திடீரென்று மயங்கி விழுந்து விட்டார். இதில் முகத்தில் காயம் ஏற்பட்ட அவர் சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அய்யப்பன் விசாரணை நடத்தினார்.தீபாவளி பண்டிகை என்பதால் உடனடியாக அவரது உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  சின்னப்பன் உடலை ருக்கு கொண்டுவந்து வீட்டில் குளிர்பதன பெட்டியில் வைத்திருந்தனர்.

உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்த கூடியிருந்தனர்.அப்போது உறவினரான எட்டயபுரம் ஆர்சி தெரு பழனிச்சாமி மகன் சங்கர் (32) என்பவரும் வந்திருந்தார். அவர் சின்னப்பன் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்பதன பெட்டியில் தங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றுதவதற்காக அங்கு சென்ற வயரை கையால் அகற்றினார். அதில் மின்சாரம் சென்றதால் சங்கரை தாக்கியது. அவரும் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.  இதனால் துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தீபாவளியன்று ஒரே ஊரில் அடுத்தடுத்து இருவர் இறந்ததால் அப்பகுதி சோகமயமானது. இறந்த சங்கர் பெயின்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவி மற்றும் ஒரு மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். இதுபோல் விபத்தில் இறந்த சின்னப்பனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Tags : Painter ,guard ,Ettiyapuram , Painter, body ,guard near Ettiyapuram, died ,electrocution
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை