×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை உயிருடன் மீட்க வேண்டி பல்வேறு இடங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்

திருச்சி : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை உயிருடன் மீட்க வேண்டி பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் 4 நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிறுவனை உயிருடன் மீட்க வேண்டி, வேலூர் மாவட்டத்தில் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏரளாமானோர் பங்கேற்று சுஜித்துக்கு பிரார்த்தனை செய்தனர். இதே போல புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனுரிலும் பழங்குடியினர் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, பிரார்த்தனை செய்தனர்.

இந்த பிரார்த்தனையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று மழையில் நனைந்தபடி சுஜித்துக்காக மனமுருகி வேண்டிக் கொண்டனர். மேலும் சுர்ஜித் உயிரோடு மீண்டுவர புதுக்கோட்டை முத்து மாரியம்மன் கோயிலில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடும் நடத்தினர். சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சந்தனக்காப்பு ராஜ அலங்காரம் செய்யபட்டிருந்தது.தீபாவளி விடுமுறைக்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் இயல்பான கூட்டமே கோவிலில் காணப்பட்டது. இந்த விஷேச நாளில் விரதமிருந்து வேண்டினால் வேண்டியது நடக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பலர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுஜித் மீண்டு வரவேண்டும் என சிறப்பு பிரார்த்தனை செய்தனர்

Tags : places ,well , Deep Prayer, Prayer, Child, Sujith, Candle, Tribal
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்