புதுடெல்லி: தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி வந்துள்ள ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவை வரவேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அதில், பயங்கரவாத நடவடிக்கைகளை வேரறுக்க வேண்டும் என்று மோடி பேசினார்.