×

சுர்ஜித் அடைந்திருக்கும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கற்பனை செய்யவே முடியவில்லை : வைகோ வேதனை

சென்னை : குழந்தை சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில், மத்திய பொதுச் செயலாளர் வைகோ தனது வேதனையை அறிக்கையின் வாயிலாக தெரிவித்து இருக்கிறார். திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 66 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. குழந்தை சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறு அருகே  45 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைகோ  விடுத்துள்ள அறிக்கையில், பூமித்தாயே, எந்த சேதாரமும் இன்றி குழந்தை சுர்ஜித்தை தந்துவிடு அம்மா என்று வைகோ வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் கோடிக்கணக்கான தமிழர்களின் கவலை தோய்ந்த கவனம் நடுக்காட்டுப்பட்டியை நோக்கியே இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்ட வைகோ, சுர்ஜித் அடைந்திருக்கும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கற்பனை செய்யவே முடியவில்லை என்று வருத்தத்தை கூறியுள்ளார்.

மேலும் அறிக்கையில் வைகோ கூறியதாவது,இப்படியொரு துன்பக் கொடுமை 2 வயது குழந்தைக்கு ஏற்பட்டு இருப்பது தாங்க முடியாத துயரத்தை கொடுத்துள்ளது.அமைச்சர்கள், உயரதிகாரிகள் 3 நாளாக மீட்புப் பணிகளில் கவலையுடன் கடமை ஆற்றுகின்றனர். தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் சுர்ஜித்தை மீட்க எவ்வளவு போராட்டம் என்று கூறியுள்ளார்.


Tags : Surjit ,Vaiko , Baby, surjith, vigo, statement, bore, well
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...