சேலம்: குழந்தை சுர்ஜித்துக்காக சேலம் நேசக்கரங்கள் அமைப்பின் குழந்தைகள் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிர் பிழைக்க வேண்டும் என பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். அதேபோல், சுர்ஜித்துக்காக புதுக்கோட்டை திருவப்பூர் மாரியம்மன் கோயிலில் பொதுமக்கள், திருநங்கைகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.