×

தீபாவளி நாளில் விதிமீறி பட்டாசு வெடித்ததாக வடசென்னையில் 18 வழக்குகள் பதிவு

சென்னை: தீபாவளி நாளில் விதிமீறி பட்டாசு வெடித்ததாக வடசென்னையில் 18 வழக்குகள் பதிவாகியுள்ளன. நீதிமன்ற அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக சென்னை திருவெற்றியூரில் மட்டும் 5 வழக்குகள் பதிவாகியுள்ளன. வண்ணாரப்பேட்டை - 4, கொருக்குப்பேட்டை- 4, புதுவண்ணாரப்பேட்டை - 3, ஆர்.கே.நகர் -2, திருவொற்றியூர்- 5 என மொத்தம் 18 வழக்குகள் போடப்பட்டுள்ளன. தீபாவளி நாளில் காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : North Chennai , Diwali, Violations of Fireworks, North Chennai, Cases, Registration
× RELATED வாக்கு பெட்டி தவறி விழுந்ததில் காவலரின் கை எலும்பு முறிந்தது