திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் சப்-ஜூனியர் மாநில அணிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் செங்குன்றத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் பாஸ்கரன், செயலாளர் முருககனி, பொருளாளர் ராஜா ஆகியோர்
முன்னிலையில் போட்டிகள் நடந்தன. பரிசளிப்பு விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கருணாகரன், செங்குன்றம் காவல் ஆய்வாளர் வசந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கி பேசிய தமிழக சிறைத்துறை டிஐஜி முருகேசன், ‘தமிழர்களின் பாரம் பரிய கலையான சிலம்பாட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கலையை தற்காப்புக்கு பயன்படுத்த வேண்டும். விரைவில் சிறைக் காவலர்களுக்கும் சிலம்பாட்ட பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.