×

கலாலில் கல்லா கட்டும் பெண் இன்ஸ்பெக்டர்

திருப்பத்தூரில் தனத்தையும், லட்சுமியையும் வைத்துக் கொண்ட கலால் பெண் இன்ஸ்பெக்டரின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம். திருப்பத்தூர் வட்டாரம், புதூர்நாடு வட்டாரத்தில் உள்ள தாபா ஓட்டல்கள், சாராய கடைகளையும், சாராயம் காய்ச்சுபவர்களையும் பட்டியலை வைத்துக் கொண்டு தீபாவளி வசூலில் கலக்கி வருகிறாராம். இதற்காக ஒரு டுபாக்கூர் நிருபரையும் துணைக்கு வைத்துக் கொண்டு செல்கிறாராம். வசூல் செய்வதை தான் ஒருவரே எடுத்துக் கொள்கிறாராம்.

இது சக சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். இதுபற்றி யாராவது கேட்டால் ஏடிஎஸ்பி பெயரை கூறி தப்பிவந்தார். இதனால் டிஎஸ்பியை கூட அவர் மதிப்பதே இல்லையாம். ஏடிஎஸ்பி பணி மாறுதலாகி சென்றாலும், தனது தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறாராம்? இவரை என்ன செய்வது? என்பது புரியாமல் கலால் பிரிவு போலீசார் புலம்பி வருகிறார்களாம்.



Tags : Girl Inspector ,Kala ,Kalla Female Inspector ,Kalla , Kalla , Kalla, Female, Inspector
× RELATED மகன் தனியாக விட்டுச்சென்ற நிலையில்...