திருச்சி: பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ள 6 மீட்புக் குழுவினர் தொடர்ந்து குழந்தையை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு்ளளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்தது. குழந்தையை மீட்க வட்டாட்சி வருவாய் அதிகாரிகள், போலீஸார், ஆட்சியர், மீட்புக் குழுவினர், ஊர்மக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர்.